நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவி தொகையை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் ஆண்டுதோறும் 8000 ரூபாய் வழங்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இதனை மறுத்த அமைச்சர் அது போன்ற ஒரு முடிவை மத்திய அரசு எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.