இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சென்னை, பெங்களுரு, மைசூரு இடையே ஒரு ரயிலும், சென்னை, கோயம்புத்தூர் இடையே ஒரு வந்தே பாரத் ரயில் சேவையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில், வந்தே பாரத் ரயில் சேவையை வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். அதிவேக சேவை வழங்கி வரும் இந்த ரயிலானது பயண நேரத்தை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.