தென் கொரிய பாடகர் லீ சாங் யூன் (46) நேற்று முன்தினம் இரவு காலமானார். தென் கொரியாவில் உள்ள கிம்சியோன் கலாச்சாரம் மற்றும் கலை மையத்தின் கிராண்ட் ஹாலில் அவர் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ஆனால் அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் குளியலறையில் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.இதனையடுத்து  நிகழ்ச்சி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.