தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் அண்மையில் தளபதி விஜய் உடன் சேர்ந்து நடித்த வாரிசு படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டிலும் தற்போது 2 படங்களில் நடித்து விட்டார். இதன் காரணமாக நடிகை ராஷ்மிகாவுக்கு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதற்கு அழைப்பு வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச பேஷன் ஷோ நிகழ்ச்சியில் நடிகர் ராஷ்மிகா கலந்து கொண்டுள்ளார். அப்போது தென்கொரிய நடிகர் ஜங் வூ, தாய்லாந்து நடிகர் கனாவட் ட்ராய் பிபட்டனோபோங் ஆகியோருடன் சேர்ந்து ராஷ்மிகா புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை தற்போது ராஷ்மிகா தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அந்த புகைப்படம் தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.