கிருஷ்ணகிரி கே ஆர் பி அணையிலிருந்து 439 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து வினாடிக்கு 439 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது. இதனால் தென்பெண்ணை ஆறு பாயும் தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூராகிய மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தென்பெண்ணை ஆறு பாயும் ஆற்றங்கரை ஓரத்திலும் தாழ்வான பகுதியிலும் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.