தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா பாடலுக்கு நடனமாடினார். இதனையடுத்து நடிகை சமந்தாவுக்கு தற்போது பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சமந்தா முன்பெல்லாம் இந்தி படங்கள் தான் டாப் என்று கூறுவார்கள் என கூறியுள்ளார்.

ஆனால் தற்போது ஹிந்தியை விட தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் அதிக படங்கள் சாதித்து வருகிறது. முன்பெல்லாம் ஆடை வடிவமைப்பாளர்களிடமிருந்து டிரெஸ் வாங்குவது என்பது ரொம்ப கடினமாக இருக்கும். தென்னிந்திய நடிகைகள் என்றாலே அவமானப்படுத்துவார்கள். ஆனால் தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது என சமந்தா கூறியுள்ளார்.