இந்தியாவை தூய்மைப்படுத்தும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சென்ற 2014ம் வருடம் தூய்மை இந்தியா 2.0 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் கிராம புறங்களில் போதிய குடிநீர், சுகாதாரமான சுற்றுப்புற சூழல், முறையான கழிப்பறை போன்ற வசதிகள் மக்களுக்கு ஏற்படுத்தி தரப்பட்டது. இப்போது பெரும்பாலான கிராமங்களில் தனி கழிப்பறைகள் உருவாக்கப்பட்டு உள்ளது.

மேலும் தெருக்கள் வாரியாக மக்களுக்கு பொது கழிப்பறைகளும் கட்டித் தரப்பட்டிருக்கிறது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் தமிழக நகராட்சி பகுதிகளிலுள்ள பொது கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் சுகாதாரமற்ற கழிப்பிடங்கள் பற்றி பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு புகார் அளிக்க வசதியாக கழிவறைகளின் நுழைவு வாயிலில் QRCode பொருத்தும் பணியானது நடந்து வருகிறது. இந்த QR கோடை செல்போன் மூலம் ஸ்கேன் செய்து நேரடியாக இணையதளத்தில் புகாரளிக்கலாம். அதுமட்டுமின்றி 5 ஸ்டார் மதிப்பீடு வழங்கும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த இணையதளத்தில் கழிவறையில் சுத்தம், பாதுகாப்பு, வெளிச்சம், துர்நாற்றம் ஆகியவைகள் பற்றி 7 கேள்விகள் இடம்பெறும். இதன் மூலமாக வரும் புகார்கள் பற்றி அந்தந்த நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.