பாஜக- அதிமுக கூட்டணியை எப்படியாவது இணைத்து விட வேண்டும் என்று பாடுபட்டவரில் ஒருவர் ஜான்பாண்டியன். அதிமுக தலைமை கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஜான்பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜி கே வாசன் ஆகியோர் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்ததால் அதிமுக பாஜக கூட்டணி பிரிந்தது. இதனை அடுத்து தென் மாவட்டத்தில் இரண்டு செல்வாக்கு பெற்ற பட்டியலின தலைவர்களாக ஜான்பாண்டியன் ,கிருஷ்ணசாமி எதிரெதிர் துருவங்களாக பிரிந்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஜான்பாண்டியன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பாஜக ஒரு தொகுதியை ஒதுக்கி உள்ளது. இதுகுறித்த, ஜான் பாண்டியன் கூறுகையில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. எந்த தொகுதி என்பதை சொல்லவில்லை .இரண்டு நாள் கழித்து எல்லாமே தெரிய வரும். எந்த தொகுதியில் நின்றாலும் ஜெயிப்பேன் இதில் சந்தேகம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்