தமிழ்நாட்டில் ஏப்ரல் 13ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதாவது ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற உள்ளன. 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் ஏப்ரல் 12 ஆம் தேதி நிறைவடைகின்றன. மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 12ம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைகின்றன.