குர்திஸ் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சிரியாவில் இருந்தவாறு இந்த கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது துருக்கியின் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். துருக்கி அரசு இந்த கிளர்ச்சியாளர்களை பயங்கரவாதிகளாக பார்க்கிறது. இதனால் அவ்வப்போது துருக்கியும் குர்திஸ் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று துருக்கி அரசு குர்திஸ் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சிரியாவின் வடக்கு பகுதியில் வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. இதில் குர்திஸ் கிளர்ச்சியாளர்களில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.