அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மவுயி தீவில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டுத் தீக்கு 271 கட்டுமானங்கள் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கடைகள் போன்றவை இறையாகி உள்ளன. ராணுவம் உட்பட பல அமைப்பு இந்த காட்டுத்தியை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.

பலரும் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்துள்ளனர். மேலும் இந்தியாவில் இருந்து பரிசாக கொடுக்கப்பட்ட 150 வருட பழமை வாய்ந்த ஆலமரம் தீக்கிரையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.