மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப் போட்டுக் கொண்டு இருகிறது. மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நினையில் சென்னையைச் சுற்றியுள்ள செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், உள்ளிட்ட ஆறு ஏரிகள் 98 சதவீதம் முழுமையாக நிரம்பியுள்ளன என தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்திப் சக்சேனா தெரிவித்தார்.

முக்கிய ஏரிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அதிகமாக நீர் ஏரிக்கு வந்தால் உடனடியாக தண்ணீரை சிறிது சிறிதாக திறந்து விடுவதற்கும் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். மிக்ஜாக் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து அதிகனமழை மிரட்டி வருகிறது. சென்னையில் உள்ள பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.