நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பவபூரணி. இவர் கோவை பீளமேடு பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறையில் முதுகலை படிப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பவபூரணி இரவு பயிற்சிக்காக தீவிர சிகிச்சை பிரிவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

நேற்று காலை யாரும் எதிர்பாராதவிதமாக பவபூரணி மருத்துவமனை கழிவறையில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த ஊழியர்கள் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பரிசோதனை செய்தபோது பவ பூரணி உயிரிழந்தது உறுதியானது.

இதுகுறித்து அறிந்த பீளமேடு போலீசார் பவ பூரணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பவபூரணி எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.