மாதம் ரூ.58லட்சம் சம்பளம் பெற்றும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என பெங்களூருவில் பணியாற்றும் மென்பொறியாளர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர் அங்குள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவர் மாதம் 58,000 ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார். இந்நிலையில் அவர், வாழ்க்கையில் நீண்ட காலமாக தனிமையில் இருக்கிறேன்.

எனக்கு ஒரு காதலி இல்லை, உடன் பணியாற்றுபவர்களும் அவரவர் வேலையில் பிசியாக உள்ளனர். வேலையும் சலிப்பாக இருக்கிறது. இதற்கு ஒரு தீர்வு கூறுங்கள்” என நெட்டிசன்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.