தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் கொண்டாட்டத்திற்கு மும்முரமாக தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு மக்கள் பொருட்கள் வாங்க ஏதுவாக 2.64 லட்சம் மெட்ரிக் டன் பொருள்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 36 ஆயிரத்து 578 ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.