நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இந்த வருடம் நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தென் மாவட்ட விரைவு ரயில்களில் விற்று தீர்ந்த நிலையில் காத்திருப்போர் பட்டியல் 200ஐ தாண்டியுள்ளது. இதனால் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக நெல்லை, கன்னியாகுமரி, பாண்டியன், அனந்த பூரி மற்றும் முத்துநகர் ஆகிய விரைவு ரயில்களில் தலா இரண்டு முன்பதிவு பெட்டிகளை இணைத்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.