தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 15 நாட்களுக்கு பட்டாசு விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் போது சென்னை தீவு திடலில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வருடம் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தீவு திடலில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தீவு திடலில் பட்டாசு விற்பனை செய்ய 15 கடைகள் அமைக்க ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.