தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 10,975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து சொந்த ஊர் திரும்பும் மக்களுக்காக சிறப்பு கட்டண ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 10ஆம் தேதி தாம்பரத்திலிருந்து புறப்படும் ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக இரவு 7.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

நவம்பர் 11ஆம் தேதி மதியம் 2.45 மணிக்கு நாகர்கோவில் புறப்பட்டு குளித்துறை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் கண்ணூர் வழியாக காலை 5.15 மணிக்கு மங்களூர் சென்றடையும். நவம்பர் 12ஆம் தேதி மங்களூரில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் முறையில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் சென்னை எழும்பூர் வழியாக அதிகாலை 5.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.