விபுல்ஷா தயாரிப்பில் டைரக்டர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடாசர்மா, சித்தி இட்னானி உள்பட பலர் நடித்திருக்கும் படம் “தி கேரளா ஸ்டோரி”. சென்ற மே 5-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டு உள்ளது. இத்திரைப்படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

மேலும் தமிழகத்தில் மால்களிலுள்ள திரையரங்குகளில் மட்டும் இந்த படம் திரையிடப்பட்டு பிறகு திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடைவிதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி படம் 37-க்கும் அதிகமான நாடுகளில் இன்று (மே 12) வெளியிட முடிவுசெய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நடிகை அடா ஷர்மா தன் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவில் “எங்கள் படத்தை பார்க்கப்போகும் கோடிக்கணக்கான மக்களுக்கும், அதனை ட்ரெண்ட் செய்பவர்களுக்கும் என் நடிப்பை ரசிப்பவர்களுக்கும் நன்றி. இந்த வார கடைசியில் தி கேரளா ஸ்டோரி படம் 37-க்கும் அதிகமான நாடுகளில் வெளியாகிறது” என குறிப்பிட்டுள்ளார்..