கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திற்பரப்பு அருவிக்கு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள். இந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மூன்றாவது நாளாக சுற்றுலா பயணிகள் அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.