திருவாரூர் மற்றும் காரைக்குடி இடையே நாளை முதல் அதாவது ஜூன் 1ஆம் தேதி முதல் வாரத்தின் ஆறு நாட்களுக்கும் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவை திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை மற்றும் பட்டுக்கோட்டை வழியாக நாளை முதல் வாரம் ஆறு நாட்கள் இயக்கப்படும். செவ்வாய், புதன்,வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நான்கு நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரை மொத்தம் ஆறு நாட்களும் ரயில்வே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் திருவாரூர் மற்றும் காரைக்குடி இடையிலான ரயில் காலை 8.20 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 11.45 மணிக்கு சென்றடையும். அதன் பிறகு பிற்பகல் 4 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.