இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு, கயல் ஆனந்தி, பிரபு நடிப்பில் நேற்று  வெளியான திரைப்படம் இராவண கோட்டம். இந்நிலையில் இராவண கோட்டம் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார் திருமாவளவன்.  இது குறித்து நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ட்வீட் செய்த நடிகர் ஷாந்தனு, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் சமூக நீதி காவலர் தொல் திருமா அவர்களின் வாழ்த்தை எங்களுக்கு கிடைத்த தேசிய விருதாகவே கருதுகிறோம்” என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.