நடிகர் போண்டா மணி 2 கிட்னியும் பாதிக்கப்பட்டு வாரம் இரண்டு முறை அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் செய்து கொண்டு உள்ளார். எனினும் குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து ஒருசில படங்களிலும் நடித்தும் வருகிறார். இந்நிலையில் போண்டா மணியின் மகள் சாய் குமாரி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், அவரது மேற்படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொண்டு வேல்ஸ் கல்லூரியில் பி.சி.ஏ படிக்க சீட் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

இதுபற்றி போண்டாமணி கூறியதாவது “நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்துக்கு எனக்கு கிடைத்த பரிசாக என் மகள் 12-ம் வகுப்பு தேர்வில் 400 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அதன்பின் கல்லூரியில் சேர்க்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும் என்று வேதனையாக இருந்தது. எனினும் ஐசரி கணேஷ் சார் நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது உங்கள் மகள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சியடைந்தால் எவ்வளவு செலவானாலும் அவரை படிக்க வைக்கிறேன் என உறுதியளித்திருந்தார்.

அவர் அன்று கூறியதை போன்று என் மகளின் ரிசல்ட்டை அறிந்தவுடனேயே அவருடைய வேல்ஸ் கல்லூரியில் ஒரு ரூபாய் கூட கட்டணம் வாங்காமல் என் மகளுக்கு பிசிஏ படிக்க சீட் கொடுத்து உள்ளார். இப்படி ஒரு நல்ல மனிதர் தெய்வத்துக்கு சமம். இது என்னுடைய உழைப்புக்கு கிடைத்த வெற்றி ஆகும். நான் எப்போதும் அவருக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்” என உருக்கமாக பேசி உள்ளார்.