திருமண வரன் இணையதளத்தின் மூலம் அறிமுகமான பெண்ணிடம் பிரிட்டனில் ஐ.டி. பொறியாளராக பணியாற்றும் பெங்களூரைச் சேர்ந்த நபர் ரூ.1.14 கோடி இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ காலில் அப்பெண் உடைகளை களைந்து பேசியதுடன், அதனை பதிவும் செய்து மிரட்டி அந்நபரிடம் பணத்தை சுருட்டியுள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர் போலீசில் புகாரளித்த நிலையில், வங்கிக்கணக்கில் இருந்த ரூ.84 லட்சத்தை முடக்கி உள்ளனர். அப்பெண்ணையும் போலீசார் தேடி வருகின்றனர். ஆன்லைனில் புதிய நபர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.