
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி வி.எம்.எஸ் காலனியில் தினேஷ்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் தினேஷ்குமாருக்கும் பாரதி கனி(22) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது நேற்று முன்தினம் இரவு தினேஷ்குமார் வேலைக்கு சென்று விட்டார். இதனையடுத்து மாமனார் மாமியாருடன் பேசிக்கொண்டிருந்த பாரதி கனி, தனது அறைக்கு தூங்க சென்றார்.
நேற்று காலை வேலை முடிந்து வந்த தினேஷ்குமார் நீண்ட நேரமாக கதவை தட்டினார். ஆனால் பாரதி கனி கதவை திறக்காததால் தினேஷ்குமார் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது தனது மனைவி தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற பாரதி கனியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.