திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் லட்சுமி நகரில் சண்முகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மோனிஷா தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்து பதினொன்றாம் வகுப்பு செல்லவிருந்தார். இந்நிலையில் வீட்டு வேலை செய்யாமல் இருந்த மோனிஷாவை பெற்றோர் கண்டித்தனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்து மோனிஷா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோனிஷாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.