திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சியஞ்ஜேரியில் 18 வயதுடைய ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கும் காக்களூர் பகுதியை சேர்ந்த திருமணமான 26 வயதுடைய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக இருவரும் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

இதனையடுத்து ஆட்டோ டிரைவர் தனது நண்பர்களான சதீஷ், சாம்ராஜ்யருடன் இணைந்து பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.