சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு தினம்தோறும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேணிகுண்டா பகுதியில் தண்டவாளம் மேம்பாட்டு பணி நடைபெற உள்ளதால் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 6.25 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில், திருப்பதிக்கு பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், மாலை 4.35 மணிக்கு புறப்படும் கருடாத்திரி விரைவு ரயில், செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றது. அதனைப் போலவே திருப்பதியில் இருந்து மறுமார்க்கமாக காலை 6.25 மணிக்கு புறப்படும் முறையில், காலை 10.10 மணிக்கு புறப்படும் ரயில், மாலை 6.05 மணிக்கு புறப்படும் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.