திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவாரி அங்கபிரதட்சணம் கொண்டாட்டோக்கன்களை இன்று வெளியிட்டுள்ளது. மாலை 3 மணிக்கு TTD இணையதளத்தில் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 22 முதல் 28ஆம் தேதி வரை அங்கப்பிரதட்சனை டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக டிடிடி தெரிவித்துள்ளது. பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு டோக்கன்களை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.