திருப்பதி கோயிலில் கோடை விடுமுறையில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் நாடு முழுவதும் இருந்து ஆயிரகணக்கானோர் வருவதால், திருப்பதியில் கூட்டம் அலைமோதுவது வழக்கமாகும். கோடை விடுமுறையில் இக்கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.