நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதேசி யை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுபா ரெட்டி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வருவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.