திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு மாதத்திற்கான தரிசன டிக்கெட் முன்கூட்டியே ஆன்லைனில் தேவஸ்தானம் சார்பாக வெளியிடப்படுகிறது.

அதன்படி நவம்பர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வருகின்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் தங்குவதற்கான அறை முன்பதிவு ஆகஸ்ட் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் எனவும் தரிசன டிக்கெட் மற்றும் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு டிக்கெட்டுகளை பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வேறு எந்த இணையதள பக்கத்தையும் நம்பி ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.