திருச்சியில் இருந்து காரைக்கால் செல்லும் முன்பதிவு இல்லா விரைவு ரயிலின் பயண நேரம் வருகின்ற ஜூலை 3ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு முன்பதிவு இல்லா விரைவு ரயில் தினம் தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வருகின்ற ஜூலை 3ஆம் தேதி முதல் திருச்சியில் இருந்து வழக்கமாக காலை 10.45 மணிக்கு புறப்படுவதற்கு பதில் 55 நிமிடங்கள் முன்னதாக காலை 9.50 மணிக்கு புறப்படும்.

இந்த ரயில் காரைக்காலுக்கு பிற்பகல் 3 மணிக்கு பதில் 2.05 மணிக்கு சென்றடையும். அதனைப் போலவே காரைக்காலில் இருந்து தஞ்சாவூருக்கு இயக்கப்படும் முன்பதிவு இல்லா விரைவு ரயில் ஜூலை மூன்றாம் தேதி முதல் வழக்கமாக பகல் 12.30 மணிக்கு புறப்படுவதற்கு பதில் 50 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.