கோவையில் INDIA கூட்டணி சார்பாக நேற்று இரவு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இது சாதாரண தேர்தல் அல்ல, சிந்தாந்த யுத்தம் , அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் போரில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என சூளுரைத்தார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தான் இந்த தேர்தலில் கதாநாயகன் என்ற பெருமிதம் தெரிவித்தார்.