தமிழகத்தை காப்பாற்ற ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, எந்த ஆட்சி எப்போது முடியும் என அரசு ஊழியர்களே கேட்கும் நிலை உள்ளதாக குறை கூறினார். மேலும் திமுகவினர் செய்த ஊழல்கள் அனைத்தையும் அதிமுக ஆட்சியில் தூசி தட்டி எடுத்து நடவடிக்கை எடுப்போம் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.