முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் – முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்.
சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார். அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு. ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்துவரும் நிலையில் தற்போது அந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தான் ஸ்டாலின் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
