திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிபட்டை சேர்ந்த திமுக பிரமுகர் ஆனந்த், தனது ஆதாரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோருடன் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் அதிமுகவில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர் மாலா சேகர். ஒன்றிய செயலாளர் உமா கன்னுரங்கம் உள்ளிட்ட திமுகவினர் ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இவ்வாறு வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் ஆனந்தனுடைய மகனான ராணுவ வீரர் சிலம்பரசன் சண்டையை விலக்க சென்றுள்ளார். அப்போது சிலம்பரசனையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் சிலம்பரசனுக்கு கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.