திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் துணை மேலாளர் ஜெயக்குமார் உடல் நலக்குறைவால் காலமானார். சாதாரண தொண்டர்கள் முதல் முதல்வர் ஸ்டாலின் வரை, யாராக இருந்தாலும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை இவரிடம் தான் கொடுக்க முடியும். அந்த அளவுக்கு திமுகவில் செல்வாக்கு படைத்தவர். முதல்வர் ஸ்டாலினுக்கு நல்ல நண்பராக இருந்தவர். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.