நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது .அரசியலுக்கு வரும் காரணத்தால் இந்த படமானது பல சிக்கல்களை சந்தித்து அதன் பிறகு வெளியானது .மக்கள் நாயகனாக காட்சி தரும் விஜய் 3 வருடங்கள் சினிமாவிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு அரசியலுக்கு செல்லலாம் என்று வேலையில் இறங்கி வருகிறார் .சினிமாவில் இருந்து விலகும் விஜய் அவருடைய மகனை சினிமாவிற்கு இழுத்து விட்டுள்ளார். ஆனால் நடிகனாக இல்லாமல் தாத்தா போல இயக்குனராக வேலையில் களமிறங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் விஜய் தொடர்பான செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது .அதாவது விஜயின் மகள் தினமும் 150 சாப்பாட்டை ரோட்டில் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு கொடுத்து வருகிறார். இதுகுறித்த  புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .விஜய் அரசியலுக்கு வரும் இப்போது இவருடைய மகள் இதுபோன்று செய்வது அரசியலுக்கு விதை போடுவது போலிருக்கிறது என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.