தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜவான் திரைப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்தது. இவர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகள் உள்ளது. இவருடைய காதல் நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் இயக்கிய போது ஆரம்பமாகியுள்ளது. தற்போது இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தங்களுடைய காதல் எப்படி மலர்ந்தது என்பது குறித்து கூறியுள்ளார். அதில் நானும் ரவுடிதான் படத்திற்கு தயாரிப்பாளராக தனுஷ் சார் தான் இருந்தார்.

அவர்தான் நயன்தாராவை பார்த்து கதை கூறுமாறு சொன்னார். உள்ளே சென்றதும் அவர் என்னை அமர வைத்து விட்டு செல்போனை ஆப் செய்தார். இதுவே எனக்கு ஒரு நம்பிக்கை கொடுத்தது. படம் எடுக்கும் பொழுது எனக்கும் அவருக்கும் அடிக்கடி சின்ன சின்ன சண்டை வந்தது. அது கொஞ்ச நேரத்தில் சரியாகிடும். இதுவே பெரிய புரிதல் என்று கூறியுள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.