தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் வெற்றிமாறன் தான் நடிக்க வாய்ப்பே இல்லை என்ற உறுதியாக கூறியுள்ளார். மாயவலை திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அமீர், நான் நிச்சயம் வெற்றிமாறனை நடிக்க வைப்பேன் என்று கூறினார். இதற்கு வெற்றிமாறன், நான் நடிப்பது என்பது நிச்சயமாக நடக்காது. நடிப்பு மற்றும் இயக்கம் என்பது இரண்டு வழி பயணம். என்னால் அதை நிச்சயம் செய்ய முடியாது என்று கூறினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் போஸ் வெங்கட், இயக்குனர் வெற்றிமாறனின் நடிப்புக்கு அழைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவிற்கு தரமான படங்கள் மட்டுமின்றி தேவையான திரைப்படங்களையும் கொடுக்கும் நல்ல இயக்குனர் வெற்றிமாறன். அவர் இன்னும் சொல்ல வேண்டிய கருத்துக்கள் நிறைய உள்ளன. அவரை தயவுசெய்து இயக்குனராக சுதந்திரமாக விட்டு விடுங்கள். ஒரு தமிழ் சினிமா ரசிகனாக கெஞ்சி கேட்பதாக போஸ் வெங்கட் கூறியுள்ளார்.