இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் எதிர்கால தேவைக்காக சேமிக்க வங்கி மற்றும் தபால் அலுவலக திட்டங்களில் இணைய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறும் வகையில் அட்டகாசமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் பாலிசி திட்டம் சிறந்தது. இந்த திட்டத்தில் நீங்கள் தினந்தோறும் 45 ரூபாய் முதலீடு செய்தால் 25 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். அதாவது ஜீவன் ஆனந்த் பாலிசியில் 30 ஆண்டுகள் முதிர்வு காலத்தில் குறைந்தது 45 ரூபாய் முதலீடு செய்தால் ஆண்டின் முடிவில் 25 லட்சம் ரூபாய் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

அது மட்டுமல்லாமல் கூடுதலான தொகையையும் விருப்பத்தின் பெயரில் முதலீடு செய்து நீங்கள் கூடுதல் வருமானத்தை பெற முடியும். இதில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு என எதுவும் நிர்ணயம் செய்யப்படாத காரணத்தால் அதிகபட்ச தொகையை கூட முதலீடு செய்ய முடியும். எனவே சிறிய தொகையை முதலீடு செய்து அதிக வருமானம் பெற விருப்பமுள்ளவர்கள் உடனடியாக இந்த பாலிசி திட்டத்தில் இணைந்து பயன்பெற முடியும்.