இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் போல ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள எண் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஆதார் எண்ணை போல 12 இலக்கம் கொண்ட அபார் எண்ணை மாணவர்களுக்கு வழங்க மத்திய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மாணவர் படிப்பு விவரம், சான்றிதழ் மற்றும் கல்வி கடன் உள்ளிட்ட பிற கல்வி தரவுகளை இந்த அபார் அட்டை மூலம் பதிவு செய்து வைத்து கண்காணிக்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.