கேரளாவில் செல்போன் அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்று தாய் கூறியதால் அவரை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கினிச்சிரா கிராமத்தில் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. செல்போன் அதிகமாக பயன்படுத்தியதற்காக தாயை இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளனர். அதே சமயம் குற்றவாளி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.