பொதுவாகவே மக்கள் தங்களுடைய குடும்பத்திற்கு நிதி சுமை வராமல் இருப்பதற்காக காப்பீடு செய்கின்றனர். அதன்படி இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பல சிறந்த காப்பீட்டு திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது. அதாவது எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி திட்டத்தின் மூலமாக வெறும் 45 ரூபாய் செலுத்தி 25 லட்சம் ரூபாய் ரிட்டன் பெறலாம். இந்த திட்டத்தில் பாலிசி போட்ட 21 வருடங்கள் அல்லது 35 வருடங்கள் கழித்து நீங்கள் தேர்வு செய்யும் பிரீமியம் தொகையை பொருத்து உங்கள் கைக்கு அதிகமான தொகை கிடைக்கும்.

ஒரு நாளுக்கு 45 ரூபாய் என மாதம் 1358 ரூபாய் ப்ரீமியம் தொகையாக நீங்கள் செலுத்தினால் 35 வருட கால அளவு பாலிசி செலுத்த வேண்டி இருக்கும். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ஒரு லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் நிலையான அதிகபட்ச வரம்பு என்று எதுவும் கிடையாது. இந்த திட்டத்தில் பாலிசிதாரரின் மரணம் மற்றும் சேமிப்பின் போது நிதி பாதுகாப்பு என இரண்டு பலன்கள் கிடைப்பதால் இது ஒரு நல்ல திட்டமாக பார்க்கப்படுகிறது.