ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மருத்துவ கல்லூரியில் உள்ள பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த வார்டு முழுவதும் புகை சூழ்ந்துள்ளது. இருந்தாலும் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அங்கிருந்த குழந்தைகளை பாதுகாப்புடன் மீட்டனர். அந்த பிரிவில் இருந்த 12 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றியவர்களுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.