ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஜி சரவணன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள், சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில், அ.தி.முக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர்.

எடப்பாடி பழனிசாமி தலையில் அ.தி.மு.க-வில் இணைந்த ஓ.பி.எஸ் ஆதரவு நிர்வாகிகள், ஓ. பன்னீர்செல்வம் பா.ஜ.க.வில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது அணியில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளனர்.