தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக தொகையை நன்கொடையாகப் பெற்ற பாஜகவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஒரு நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டு நடத்தினால் அவர்கள் உடனடியாக அரசியல் கட்சிக்கு நிதி கொடுக்கிறார்கள் என விமர்சிக்கப்படுகிறது. EDயின் விசாரணை வளையத்திற்குள் இருந்தபோது Future Gaming நிறுவனம் ரூ.1000 கோடி நன்கொடை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது