இலங்கையில் நடைபெறவுள்ள இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டிக்காக, இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இலங்கை ஆடுகளங்கள் பொதுவாக மெதுவாக இருக்கும் என்பதால், தற்காப்பு ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ளுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி பயிற்சியின் தொடக்கத்தில் அவர் பந்துகளை கவனமாக தடுத்து ஆடி, தனது தற்காப்புத் திறனை வெளிப்படுத்தினார்.

ஆனால், சிறிது நேரத்திலேயே அவரது இயல்பான அதிரடி ஆட்டம் வெளிப்படத் தொடங்கியது. தற்காப்பு ஆட்டத்தை விட்டுவிட்டு, பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்யும் வகையில் அதிரடி ஷாட்களை விளையாடத் தொடங்கினார்.

“>

 

பயிற்சியின் இறுதிவரை பந்துகளைப் பவுண்டரிக்கும் சிக்சருக்கும் விரட்டிய அவரது அதிரடி ஆட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொடக்கத்தில் தற்காப்பு ஆட்டத்திற்காகத் தொடங்கிய பயிற்சி, இறுதியில் அவரது அதிரடி பேட்டிங் திறனை வெளிப்படுத்தும் களமாக மாறியது.