பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் எம்.ஜி.ஆர் நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் செந்தில்குமார் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று செந்தில்குமார், அவரது மனைவி காமாட்சி, உறவினர்களான கண்ணன், சங்கர் ஆகிய நான்கு பேரும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக மேற்கூரை இடிந்து விழுந்ததால் 4 பேரும் காயமடைந்தனர். அவர்களது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் நான்கு பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.